வியாழன், 5 மே, 2011

திருச்சி ஸ்ரீ ராமகிருஷ்ணா குடிலில் இலவசக் கல்வி: ஆதரவற்ற குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்

ஈரோடு:

                இலவசக் கல்வியைப் பெற ஆதரவற்றக் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சி.காமராஜ் தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பாக   திருச்சி மாவட்ட ஆட்சியர் சி.காமராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:  

               திருச்சி மாவட்டம், திருப்பராய்துறையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா குடிலில், தாய், தந்தை இருவருமே இல்லாத, ஆதரவற்ற ஏழை சிறுவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.  இங்கு, 1 முதல் 8-ம் வகுப்பு வரை இங்கு பயிலலாம். 10-ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு குடில் நிர்வாகத்தில் ஓராண்டு பயிற்சி அளித்த பின், திருச்சியில் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்த்து விடப்படுவர். 

               தொழிற்பயிற்சி முடித்த மாணவர்கள் வேலைவாய்ப்புக்குரிய தகுதிகளுடன் வெளியில் அனுப்பி வைக்கப்படுவார்கள். பள்ளியில் படிக்கும்போது மாணவர்களுக்கு அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சி கற்றுத் தரப்படுகிறது.  

தாய், தந்தை இருவரும் இல்லாத குழந்தைகளை குடிலில் சேர்க்க விரும்புவோர், 

தலைவர், 
ஸ்ரீ ராமகிருஷ்ண குடில், 
திருப்பராய்த்துறை, 
திருச்சி - ௬௩௯௧௧௫

  மற்றும் 

சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை, 
சென்னை - 9 

ன்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம்.

0 கருத்துகள்:

Google Indic Transliterate

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP