குரூப்-1 இலவச மாதிரித் தேர்வு
குரூப்-1 தேர்வுக்கான இலவச மாதிரித் தேர்வு ஃபோகஸ் அகாதெமியின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை (மே 22) நடைபெறவுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் துணை ஆட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர் மற்றும் கூட்டுறவு துணைப் பதிவாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான குரூப்-1 முதல்நிலைத் தேர்வு ஜூன் மாதம் 5-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, ஃபோகஸ் அகாதெமி 200 வினாக்கள் கொண்ட மாதிரித் தேர்வினை நடத்துகிறது. நடப்பு நிகழ்வுகள், பொது அறிவுப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு:
044-3200 0809, 98436 65705.