பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு இலவச சிற்பக்கலை, ஓவியப் பயிற்சி
பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு கனரா வங்கி கைவினை கலைஞர் பயிற்சி மையத்தின் சார்பில், சிற்பக்கலை, ஓவியப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பிளஸ் 2 தேறிய, தவறிய மாணவர்களுக்கு 18 மாத கால கற்சிற்பம், மரச்சிற்பம், உலோகச் சிற்பம் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி, சீருடை, தங்குமிடம், உணவு இலவசம். மாணவிகளுக்கு ஒருமாத கால தஞ்சாவூர் ஓவியம், செயற்கை நகை தயாரிப்பு மற்றும் பர் பொம்மை தயாரிப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி, மதிய உணவு இலவசம். பயிற்சிக்கான பொருட்கள் வழங்கப்படும். விரும்புபவர்கள் காரைக்குடியில் உள்ள பயிற்சி மைய மேலாண் இயக்குனர் மேகவர்ணத்தை, 94874 12948 ல் தொடர்பு கொள்ளலாம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக