கன்னியாகுமரி மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு : 97.5% தேர்ச்சி
கன்னியாகுமரி மாவட்டத்தில் 2010-2011-ம் கல்வியாண்டுக்கான பிளஸ் 1 வகுப்பு தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன.
மொத்தம் 97.50 சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 186 பள்ளிகளைச் சேர்ந்த 10,486 மாணவர்களும், 13,033 மாணவிகளுமாக மொத்தம் 23,519 பேர் இத் தேர்வை எழுதியிருந்தனர். இதில் 10,017 மாணவர்களும், 12,916 மாணவிகளுமாக மொத்தம் 22,933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி சதவிகிதம்:
மாணவர்கள்- 95.50, மாணவிகள்- 99, மொத்த தேர்ச்சி சதவிகிதம்- 97.50.
கல்வி மாவட்ட வாரியாகத் தேர்ச்சி விவரம்:
தக்கலை கல்வி மாவட்டத்தில் 3,548 மாணவர்களும், 4,505 மாணவிகளுமாக மொத்தம் 8,053 பேர் தேர்வு எழுதியிருந்தனர். இதில் 3,385 மாணவர்களும், 4,488 மாணவிகளுமாக மொத்தம் 7,873 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி சதவிகிதம்:
மாணவர்கள்- 95, மாணவிகள்- 99.60, மொத்த தேர்ச்சி சதவிகிதம்- 97.70. குழித்துறை கல்வி மாவட்டத்தில் 3,771 மாணவர்களும், 4,260 மாணவர்களுமாக மொத்தம் 8,031 பேர் தேர்வு எழுதியிருந்தனர். அவர்களில் 3,640 மாணவர்களும், 4,222 மாணவிகளுமாக மொத்தம் 7,862 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி சதவிகிதம்:
மாணவர்கள்- 96.50, மாணவிகள்- 99, மொத்த தேர்ச்சி சதவிகிதம்- 97.80. நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 3,167 மாணவர்களும், 4,268 மாணவிகளுமாக மொத்தம் 7,435 பேர் தேர்வு எழுதியிருந்தனர். அவர்களில் 2,992 மாணவர்களும், 4,206 மாணவிகளுமாக மொத்தம் 7,198 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி சதவிகிதம்:
மாணவர்கள்- 94, மாணவிகள்- 98.50, மொத்த தேர்ச்சி சதவிகிதம்- 96.80.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக