10ம் வகுப்பு தேர்வு முடிவு 27ஆம் தேதி வெளியீடு
10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 27ஆம் தேதி வெளியாகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 28ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது. இந்த தேர்வை 9 லட்சத்து 50 ஆயிரம் மாணவ மாணவிகள் 2 ஆயிரத்து 800 மையங்களில் எழுதினார்கள். இவர்களில் 8 லட்சத்து 56 ஆயிரத்து 956 பேர் பள்ளிக்கூட மாணவ மாணவிகள். அதில் 4 லட்சத்து 22 ஆயிரத்து 21 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 35 ஆயிரத்து 935 பேர் மாணவிகள்.
சென்னையில் 272 பள்ளிகளை சேர்ந்த 36 ஆயிரத்து 148 பேர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதினார்கள். காப்பி அடிப்பதை தடுக்கவும் கண்டுபிடிக்கவும் 4 ஆயிரம் பறக்கும்படைகள் அமைக்கப்பட்டு இருந்தன. தேர்வு மையங்களில் மாணவ மாணவிகள் தேர்வு எழுதுவதை கண்காணித்தனர். ஏப்ரல் 11 ந்தேதி சமூக அறிவியலுடன் தேர்வு முடிந்தது.
விடைத்தாள் திருத்தும் பணி உடனடியாக தொடங்கியது. மே மாதம் 2 ந் தேதி விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி முடிந்தது. பின்னர் பாடவாரியாக மார்க்குகள் கம்ப்ழூட்டரில் பதிவு செய்யும் பணி நடந்தது. பின்னர் விடைத்தாளில் உள்ள மார்க்கையும் கம்ப்யூட்டரில் உள்ள மார்க்கையும் ஒப்பிட்டு சரிபார்க்கும் வேலை நடந்தது. இப்போது அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு முடிவு வெளியிட தயார் நிலையில் உள்ளது.
இந்நிலையில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 27ஆம் தேதி வெளியாகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. மெட்ரிக், ஓ.எஸ்.எஸ்.எல்.சி முடிவுகளும் 27ஆம் தேதி வெளியாகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக