செவ்வாய், 28 ஜூன், 2011

அழகப்பா பல்கலைக்கழக பட்டப்படிப்பிற்கான தேர்வு முடிவுகள் வெளியீடு

         அழகப்பா பல்கலைக்கு உட்பட்டு சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் இயங்கும் இணைப்பு கல்லூரிகளில் பட்டப்படிப்பிற்கான பருவ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

          இம்முடிவுகளை மாணவர்கள் www.alagappauniversity.ac.in வெப்சைட்டில் தெரிந்து கொள்ளலாம். முடிவு வெளியான 10 நாட்களுக்குள் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை பல்கலை இணையதளம் மற்றும் கல்லூரிகளில் பெறலாம். 

               விண்ணப்பத்துடன் ரூ. 225க்கு டி.டி., எடுத்து பல்கலை., தேர்வு பிரிவிற்கு அனுப்புமாறு, தேர்வாணையர் மாணிக்கவாசகம் தெரிவித்தார்.

Read more...

இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழக சமுதாயக் கல்லூரிகளில் 2 லட்சம் மாணவர்கள்

          இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (இக்னோ) நாடு முழுவதும் தொடங்கிய சமுதாயக் கல்லூரிகளில் கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் இரண்டு லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.  இத்தகவலை பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.என். ராஜசேகரன் பிள்ளை தெரிவித்தார். 

               இக்னோவுடன் இணைந்து 600 சமுதாயக் கல்லூரிகள் இயங்குகின்றன. இக்கல்லூரிகளில் தொழிற்கல்வி, செயல்முறைப் படிப்பு ஆகியவை நடத்தப்படுகின்றன.  பள்ளிப் படிப்பை அடுத்து, இத்தகைய தொழிற்படிப்புகளில் சேர்ந்து படித்தால், வாழ்க்கைக்கு அது பெரிதும் உதவும். இத்தகைய கல்விமுறை உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்றார் ராஜசேகரன் பிள்ளை. திறந்தநிலைக் கல்வி, வசதியான கால அளவுத் திட்டம், தொழில்நுட்ப வசதியுடன் கூடிய கற்பித்தல் முறை, தொலைநிலைக் கல்வி முறை ஆகியவை குறிப்பிடத்தக்க அம்சங்கள் ஆகும். இக்கல்லூரிகள் உயர்நிலைக் கல்விக்குச் சரியான மாற்று ஏற்பாடாகவே அமைந்துள்ளன என்றார் துணைவேந்தர். 

             நாட்டிலேயே முதல் முதலாக இக்னோ சார்பில் புதுவைப் பல்கலைக்கழகத்தில்தான் சமுதாயக் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் அரசு தொடங்கிய எல்லா பல்கலைக்கழகங்களும் தலா 10 சமுதாயக் கல்லூரிகளைத் தொடங்குவது என முடிவு செய்துள்ளன என்றும் ராஜசேகரன் பிள்ளை கூறினார். சமுதாயக் கல்லூரிகளில் இரண்டாண்டுக்கு மேல் படிப்பைத் தொடர இயலாவிட்டால், இரண்டாம் ஆண்டுத் தேர்வுகளைப் பூர்த்தி செய்பவர்களுக்கு இணைப் பட்டப்படிப்பு (அசோசியேட் டிகிரி) வழங்கப்படுகிறது.

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

Read more...

சனி, 4 ஜூன், 2011

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நெட், செட் தகுதித் தேர்வுக்கு இலவச பயிற்சி

           கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு நிதியுதவியின் கீழ், நெட்  மற்றும் செட் தகுதித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் அளிக்கப்பட உள்ளது. 

            பல்கலைக்கழக மானியக்குழு சார்பில் நடத்தப்படும் நெட் மற்றும் செட் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு, முதல் தாளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் 10 மாதிரித் தேர்வுகளுடன் நடைபெற உள்ளன. 

           இதில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் வரும் 26-ம் தேதி நடைபெற உள்ள நெட் தேர்வுக்கும், ஆகஸ்டு 14-ம் தேதி நடைபெற உள்ள செட் தகுதித் தேர்வுக்கும் விண்ணப்பம் அனுப்பலாம். 

 மேலும் விவரங்களுக்கு 
 
          0452-2456100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும்.  இத்தகவலை, மதுரை காமராசர் பல்கலைக்கழக மானியக்குழு நெட், செட் பயிற்சித் திட்டங்களுக்கான ஒருங்கிணைப்பாளர் வெ. சின்னையா தெரிவித்துள்ளார்.

Read more...

புதன், 25 மே, 2011

10ம் வகுப்பு தேர்வு முடிவு 27ஆம் தேதி வெளியீடு

            10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 27ஆம் தேதி வெளியாகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
            தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 28ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது. இந்த தேர்வை 9 லட்சத்து 50 ஆயிரம் மாணவ மாணவிகள் 2 ஆயிரத்து 800 மையங்களில் எழுதினார்கள். இவர்களில் 8 லட்சத்து 56 ஆயிரத்து 956 பேர் பள்ளிக்கூட மாணவ மாணவிகள். அதில் 4 லட்சத்து 22 ஆயிரத்து 21 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 35 ஆயிரத்து 935 பேர் மாணவிகள்.
          சென்னையில் 272 பள்ளிகளை சேர்ந்த 36 ஆயிரத்து 148 பேர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதினார்கள். காப்பி அடிப்பதை தடுக்கவும் கண்டுபிடிக்கவும் 4 ஆயிரம் பறக்கும்படைகள் அமைக்கப்பட்டு இருந்தன. தேர்வு மையங்களில் மாணவ மாணவிகள் தேர்வு எழுதுவதை கண்காணித்தனர். ஏப்ரல் 11 ந்தேதி சமூக அறிவியலுடன் தேர்வு முடிந்தது.
                 விடைத்தாள் திருத்தும் பணி உடனடியாக தொடங்கியது. மே மாதம் 2 ந் தேதி விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி முடிந்தது. பின்னர் பாடவாரியாக மார்க்குகள் கம்ப்ழூட்டரில் பதிவு செய்யும் பணி நடந்தது. பின்னர் விடைத்தாளில் உள்ள மார்க்கையும் கம்ப்யூட்டரில் உள்ள மார்க்கையும் ஒப்பிட்டு சரிபார்க்கும் வேலை நடந்தது. இப்போது அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு முடிவு வெளியிட தயார் நிலையில் உள்ளது.
          இந்நிலையில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 27ஆம் தேதி வெளியாகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது.  மெட்ரிக், ஓ.எஸ்.எஸ்.எல்.சி முடிவுகளும் 27ஆம் தேதி வெளியாகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read more...

செவ்வாய், 24 மே, 2011

பாரத் பல்கலைக்கழக பி.இ. பாடத் திட்டத்தில் வாழ்க்கைத் தொழில் கல்விப் பாடம்

               மாறி வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ளும் வகையில் பொறியியல் படிப்புகளுக்கான பாடத் திட்டத்தில், வாழ்க்கைத் தொழில் கல்விப் பாடம் என்ற புதிய பகுதியை பாரத் பல்கலைக்கழகம் இணைக்க உள்ளது.  பொறியியல் படிப்பின் இரண்டாம் ஆண்டு பாடத் திட்டத்தில், இந்த புதிய பாடம் வழங்கப்பட உள்ளது.  

இதுகுறித்து பாரத் அறிவியல் தொழில்நுட்ப மைய முதல்வர் ஆர். காரி தங்கரத்தினம் திங்கள்கிழமை கூறியது:  

              வாழ்க்கைத் தொழில் கல்விப் பாடம் ஐபிஎம் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இதை மாணவர்களுக்கு கற்பிக்கவும், பயிற்சி அளிப்பதற்காகவும், ஐபிஎம் நிறுவனத்துடன் பாரத் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.  போட்டிகள் நிறைந்த இந்த சூழலில், இதுபோன்ற பாடத் திட்டங்கள் மிகவும் அவசியம். குறிப்பாக -டெஸ்ட்டிங் சாஃப்ட்வேர்- துறையில் மாணவர்களுக்கு, ஐபிஎம் நிறுவனம் பயிற்சி அளிக்க உள்ளது என்றார்.

Read more...

தமிழகத்தில் எம்.பி.ஏ, எம்.சி.ஏ வகுப்பில் சேர 28ல் நுழைவுத்தேர்வு துவக்கம்

                  தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்சிஏ, எம்பிஏ படிப்பில் சேர வரும் 28ம் தேதி முதல் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வை 99 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.

      தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வின் (டான்செட்) கீழ் கவுன்சலிங் மூலம் அண்ணா பல்கலைக்கழகம், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் எம்சிஏ., எம்பிஏ., எம்.இ., மற்றும் எம்.டெக்., சேர்க்கை நடைபெறுகிறது. இதன் கீழ் சுமார் 200 கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் வருகின்றன. டான்செட் மூலம் அரசு, அரசு உதவி பெறும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 50 சதவீத இடங்களும் நிரப்பப்படுகின்றன.

                 இத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் இறுதிவரை மாணவர்களிடம் இருந்து பெறப்பட்டது. தமிழகம் முழுவதும் 99 ஆயிரம் பேர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 3 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். தேர்வில் கணிதம், ரீசனிங், ஆங்கிலம், டேட்டா இன்டர்ப்ரேட்டசன் போன்ற பகுதிகளில் இருந்து 100 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொன்றுக்கும் தலா ஒரு மதிப்பெண். தவறான பதிலுக்கு 0.25 மதிப்பெண் கழிக்கப்படும். இதில் 40 மதிப்பெண்கள் எடுத்தாலே சிறந்த கல்லூரிகளில் சேரலாம்.

             இந்தாண்டு எம்பிஏ., க்கான நுழைவுத் தேர்வு வரும் 28 காலை 10 மணிக்கும் எம்சிஏ.,விற்கு மதியம் 2.30 மணிக்கும் நடைபெறுகிறது. மே 29ல் எம்.இ., மற்றும் எம்.டெக்., தேர்வுகள் காலையில் நடைபெறும். ஜூன் 3ம் வாரத்தில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.

இது குறித்து அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கூறுகையில் 


           ‘இந்தாண்டு அதிகளவிலான மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. அதனால் மேற்படிப்பிற்கான டான்செட் தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இன்ஜினியரிங் கவுன்சலிங்கை போல் டான்செட்டிலும் காலியிடங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இளங்கலை படிக்கும் போதே நன்றாக படித்தால் டான்செட்டில் அதிக மதிப்பெண் பெறமுடியும்’ என்றார்.

Read more...

சனி, 21 மே, 2011

சென்னை எம்.ஜி.ஆர். அரசு திரைப்பட கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்


          சென்னை தரமணியில் உள்ள எம்.ஜி.ஆர். அரசு திரைப்பட கல்லூரியில் ஒளிப்பதிவு, பிலிம் பிராசசிங், சவுண்ட் என்ஜினீயரிங், பிலிம் எடிட்டிங், திரைக்கதை, வசனம், டைரக்ஷன் மற்றும் டி.வி. நிகழ்ச்சி தயாரிப்பு ஆகிய பாடப்பிரிவுகளில் டிப்ளமோ படிப்புகள் வழங்கப்படுகின்றன.

        இதில் பிளஸ்-2 முடித்தவர்கள் சேரலாம். ஒளிப்பதிவு, பிலிம் பிராசசிங் ஆகிய படிப்புகளில் சேர மட்டும் இயற்பியல், வேதியியல் பாடங்களை படித்திருக்க வேண்டும். பிலிம் எடிட்டிங் படிப்பில் பிளஸ்-2 எந்த பிரிவு மாணவர்களும் சேரலாம். திரைக்கதை, வசனம், டைரக்ஷன் மற்றும் டி.வி. நிகழ்ச்சி தயாரிப்பு படிப்புக்கு பட்டப் படிப்பு அவசியம்.

        மேற்கண்ட படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த 18-ந் தேதி முதல் வழங்கப்பட்டு வருகின்றன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜுன் மாதம் 6-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 
             கூடுதல் விவரங்கள் அறிய 044-22542212 என்ற டெலிபோன் எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்று அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முகவரி 
M G R Film and Television Institute of Tamil Nadu
Tharamani, 
Chennai - 600 113 


       Application forms with Prospectus can be obtained in person from the Principal, MGR Govt Film and Television Institute, Tharamani, Chennai-600 113 by sending a Demand Draft from Rs 100/- drawn from Nationalized Banks payable at Chennai Demand Draft for Rs. 30/- For SC/ST Candidates on production of Xerox copy of community Certificate in favour of Principal, M.G.R. Govt. Film and Television Institute, Chennai-600113

   Application forms and Prospectus can also be Downloaded from www.tn.gov.in  website and to receive by post by submitting the above mentioned Demand Draft along with self addressed envelope cover (30 cm x 25 cm) affixed with postage stamp for Rs. 25/- Demand Draft obtained before 18 May, 2011 will not be accepted Date of Commencement of sale of Application 18 May, 2011

        Last date for the Sale of Application and submission of filled up Applications are 06.06.2011 before 5 p.m. Visit at www.tn.gov.in

Read more...

Google Indic Transliterate

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP